Posts

Showing posts from June, 2015

தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) வறிய மக்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவிகள்

Image
அல்ஹம்துலில்லாஹ் !! புகழனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே . எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) அமைப்பினால் புனித ரமழானை முன்னிட்டு எம் பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமழான் ஆரம்பமாக முன்னர் அந்த ஏழை மக்களின் கைகளை சென்றடையக்கூடியவாறு கடந்த 17/06/2015 மற்றும் 18/06/2015 ஆகிய தினங்களில் விநியோகிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கான ஒரு மாதத்திற்கு முழுவதும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி கடந்த 17ம் திகதியும் மேலும் 40 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 18ம் திகதியும் வழங்கி வைக்கப்பட்டது. இவ்விநியோகத்திற்காக கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பிரதேசங்களில் வாழும் மிகவும் வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டிருந்தது . இவ் விநியோகத்தினை சிறப்பாக செய்து முடித்த எமது குழுவுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு எமது இந்த வெற்றிகரமான திட்டத்துக்க

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ..! தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா? இஸ்லாம் எப்வோ கூறியதை இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

Image
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள். இரைப்பை குடல் பாதை பாதிப்பு ! நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்த