Posts

Showing posts from July, 2015

முஸ்லிம் காங்கிரசிலும்,வில்பத்துவிலும் அமைச்சர் றிஷாத்தின் உண்மை முகம்

Image
அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள வில்பத்து விவக ாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே, 1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? 2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும் மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. . வில்பத்து பிரச்சினை இன்று நே

சாய்ந்தமருது தொடர்பில் ஹரீஸின் வினாக்களுக்கு விடை தருவாரா ரிஷாட்

Image
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் இதுவரை எங்காவது பேசியிருக்கின்ராரா? அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்று சொல்வாரா? நான் நினைக்கவில்லை, ஏனென்றால் சாய்ந்தமருதுக்கு அத்தனை துரோகங்களை இளைத்த வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களது பலமான பிடியில் அமைச்சர் ரிசாட் இருந்துகொண்டிருக்கிறார். சாய்ந்தமருது மக்கள் மயில் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகளால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லப்போவது இதே வை.எல்.எஸ்.ஹமீட் என்பதே உண்மை. முடியுமானால் ஒரு தேசியப் பட்டியல்தான் கிடைத்தாலும் அதை மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனால் கூறமுடியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் கேள்விஎழுப்பினார். இன்று (24) இரவு சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் கல்முனை மாநக

நாம் முஸ்லிம்கள் ஏன் மஹிந்தவிற்கு வாக்களிக்க கூடாது என்பதற்கு ஆதாரங்களுடன் ஒருசில தகவல்களை உங்களுக்கு தருகின்றேன்.

Image
என்னிடம் ஏராளமாக தகவல்கள் இருக்கின்றன. கீழ்வரும் சம்பவங்களை நடாத்திய ஒரு நாயையேனும் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை. திகதி இடம் சம்பவம் 1) 09.01.2013 அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 2) 26.01.2013 இரத்தினபுரி 150 பௌத்த தேரர்களைக் கொண்ட குழு ஜெய்லானி பள்ளிவாயலைத் தாக்குவதற்கான முயற்சி. 3) 09.02.2013 மாத்தறை கந்தர பள்ளிவாயல் தாக்குதல். 4) 10.02.2013 குருநாகல் நூரம்மல பள்ளிவாயலுக்கு சுபஹ_ தொழுகைக்காக சென்றவர் தாக்கப்பட்டார். 5) 22.02.2013 காலி ஹிரும்புற முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 6) 28.02.2013 கேகாலை கேகாலை ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. 7) 03.03.2013 இரத்தினபுரி ஓபநாயக்க பள்ளிவாயல் தாக்குதல். 8) 03.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 9) 05.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு. 10) 28.03.2013 கொழும்பு பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள பெசன் பக் நிறுவனம் தாக்கப்பட்டது. 11) 16.04.2013 கண்டி கம்பளை நகரில் முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான லக்கி எம்போரியம் தாக்கப்பட்டது. 12